Wednesday, December 28, 2011

அன்னா ஹஸாரேயும் உண்ணாவிரதமும்


முதலில் மக்களுக்கு உதவுவதாக நாடகமாடும் இவர்கள் யார்..? இவற்றைப்பற்றி தெரிந்துக்கொள்வோம். இவ்வளவு நாட்கள் மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்தவர்கள் இன்று இவர்கள் கேட்ட பல அம்சங்கள் அடங்கிய மசோதாவை தாக்கள் செய்யும்போது ஏன் காட்டுக்கூச்சல் போட்டு பாராளுமன்றத்தை தடுக்கவேண்டும். மக்களுக்காக உழைப்பதாக சொல்லும் இவர்கள் மக்க்ளின் வேர்வை சிந்தி கட்டும் வரிப்பணத்தில் நடக்கும் நாடாளுமன்றத்தை முடக்கவேண்டிய காரணம்தான் என்ன ? இதுவரை நடந்த உண்ணாவிரத நாடகத்தின் உச்சம்தான் இந்த லோக்சபா முடக்கம்.

முதலில் நம்ம நைனா ஹசாரே பற்றி...
ஊரில் உள்ளவர்களையும் மற்றவர்களையும் நேர்மையாக நடக்க வேண்டும் என்று சொல்லும் இவர் வந்த வரலாறு. மக்களுக்கு போராடுவதாக நாடகம் ஆடும் இவர் இவ்வளவு நாள் எங்கிருந்தார்..? திடீரென இவர் நடத்தும் உண்ணாவிரதத்திற்க்கு எப்படி இவ்வளவு பணம். கொடுப்பவர்கள் யார் இவர்களின் நோக்கம்தான் என்ன.

உங்களுக்கு தெரியும் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படிப்பட்டது என்று. இவர்கள் நடத்தும் பயிற்சி எப்படி இருக்கும்.? சிறுபான்மையினரை எப்படி அழிப்பது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் நாமும் நம் ஈனங்கெட்ட மதமும் எப்படி வசதியாக வாழ்வது. இதுதான் இவர்களின் நோக்கம். இவர்களுக்கு அம்மா, தங்கை, அக்கா போன்ற உறவுமுரை உறவுகள் பற்றி வித்தியாசம் தெரியாதவர். இவர்கள் இருக்கும்வரை இந்திய கலாச்சாரத்தில் சகோதரத்துவம் வளரவே வளராது. உணர்வற்ற ஐந்தறிவு உள்ள மிருகங்கள் இருக்கும் இயக்கம்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். 

இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் உறுப்பினர்தான் இந்த தாதா ஹஸாரே. ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான நானாஜி தேஷ்முக் என்பவரின் செயலராக பணியாற்றி உள்ளார் அன்னா ஹஸாரே. 1983-ல் உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டாவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் பயிற்சி பாசறையில் பங்கு கொண்டுள்ளார்.

நாட்டுக்காக உழைப்பதாக சொல்லும் இந்த ஹசாரே, நம் நாட்டு போரை எப்படி எதிர்கொண்டார் தெரியுமா.? நாட்டை பாதுகாக்க நடக்கும் யுத்தத்தில்  பங்கு கொள்ளாமல் ஒளிந்து கொண்ட ஒரு கோழை ராணுவவீரர்தான் அன்னா ஹஸாரே. 1965 ல் இந்தியா, பாகிஸ்தான்  யுத்தம் நடக்கும் போது அதில் பங்கெடுக்காமல் இந்திய ராணுவத்தில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டார். இவர் ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர் என்று நடுநிலையாளர்கள் பல பேர் சுட்டிகாட்டினாலும் அந்த உண்மை செய்தியானது மக்களுக்கு இதுவரை முறையாக சேரவில்லை என்பதுதான் நம் கவலை

ராம் பாபா என்னும் கொடியவன்
ஊழலுக்கும், கறுப்பு பணத்திற்கும் எதிரான பொது மக்களின் கோபத்தையும், உணர்வுகளையும் சாதகமாக பயன்படுத்த ஆன்மீகத்தின் பெயரால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ள ஆர்.எஸ்.எஸின் யோகா குரு பாபா ராம்தேவும் ஹசாரேயுடன் மாடல் போராட்டத்திற்கு தயாராகி வருகிறார்.ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தீவிர ஆதரவுடன் இந்த போராட்டம் நடைபெறவிருக்கிறது.

இவர்கள் மக்களை பல வகையிலும் ஹிந்துத்துவத்தை பயன்படுத்தி முட்டாளாக்கி சம்பாரித்த பணம் இன்னும் பல நாடுகளிலும் கருப்புப்பணமாக இருக்கிறது. பல குட்டித்தீவுகளை சொந்தமாக இருக்கிறது. இன்னும் கூடியவிரைவில் செய்தியாக வரும்.

இவர்தான் என்று இல்லாமல் மக்களுக்கு உண்மையை உணர்த்தக்கூடிய பத்திரிக்கைத்துறையில் பல பார்ப்பணர்கள்தான் இருக்கின்றனர். அவைகளில் இந்த செய்திகளை பார்பன தினமணி, தினமலர் போன்றவை இருட்டடிப்பு செய்கின்றன.  "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்" என்பதை மறைக்க ஆயிரம் பொய் சொல்கிறார் அன்னா ஹஸாரே. இவர் மட்டுமல்லாமல் இவர் கூட இருக்கும் கூட்டங்களான எல்லோரும் ஒருவகையில் மக்களை அழிக்கும் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர்கள்தான்.

கிரன் பேடி என்னும் நாடகக்காரி
இவரைப்பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் இவற்றையும் நீங்கள் படிக்க வேண்டும் கிரன் பேடி, பிரபலமான ஐ.பி.எஸ். போலிஸ் அதிகாரி. இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி, நேர்மையான(?) போக்குள்ளவர். தில்லியில் போக்குவரத்து அதிகாரியாக இருந்தபோது இந்திரா காந்தியின் காரையே 'நோ பார்க்கிங்' இடத்தில் நிறுத்தியதற்காக இடம் பெயர்த்தவர். (அப்பப்பா தாங்கமுடியலைங்க)

என்ன நேர்மையான அதிகாரி ! இவர் செய்த காரியம்தான் என்ன.? தன்னுடைய பதவியை டிசம்பர் 2007ம் ஆண்டு விருப்ப ஓய்வு எடுத்துகொண்டு மக்களுக்கு உழைக்க வந்தாராம். 2007ம் ஆண்டு ஆரம்பித்துள்ளார் தன்னுடைய பிரச்சாரத்தை..எப்படி மக்களின் பணத்தின்மூலம் விமானசெலவு, உணவு, மற்றும் தன் குடும்பசெலவு ஆகியவற்றை ஒவ்வொறு பயணத்தின்போதும் இக்கூட்டத்தை ஏற்பாடு செய்பவர்களிடம் வசூல் செய்வது. இவருக்கு அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல ஆண்டுகளாக. 
 
அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள், என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என 12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார் கிரண் பேடி.

இரண்டாவதாக அறக்கட்டளை
பத்திரிக்கைமூலமும், ஹிந்து சங்கங்கள் மூலமும் வரும் பணத்தை தன் பெயரில் ஆரம்பித்துள்ள அரக்கட்டளையில் போட்டு..(அட நல்ல அறக்கட்டளைன்னு வேற தினமலர் சொல்றாங்க) மக்களை ஏமாற்றி ஏப்பம் விடுவது இதை எந்த மதமான ஹிந்துத்துவத்தை பயன்படுத்தினாரோ, அதே பெயரான தி ஹிந்து பத்திரிக்கை பக்காவாக ஆதாரத்துடன் வெளியிட்டு இவர் வண்டவாளத்தை பிட்டுபிட்டு வைத்தது. இவர்தான் மக்களுக்காக உழைக்கும் உண்மையாளராம். (நம்பினால் நம்புங்கள்) மக்களுக்காக பதவியையே ராஜிநாமா செய்தவர். எப்படி எமாற்றுவார் என்று நினைத்தால் அது உங்கள் தவறு. பதவியில் இருந்து இவ்வளவு சம்பாரிக்க முடியாதுங்க.  நம் நாட்டில் படித்த சகோதரரகள் சம்பாரிப்பதைவிட பிச்சைக்காரர்கள், சாமியார்களின் சம்பளம் எவ்வளவு அதிகம் என்று உங்களுக்கு தெரியும்.

அர்விந்த் கேஜ்ரிவால் அன்ட் கோ
இவர்களும் மக்களுக்காக உழைக்கவேண்டும் என்று கவர்மென்ட் வேலையை உதரிவிட்டு வந்துவிட்டாராம். அன்னா ஹசாரேவின் 'ஊழலுக்கு எதிரான இந்தியா' எனும் அமைப்பில், சட்ட ஆர்வலராக அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கிராராம் !!! ? அன்னா ஹஸாரே போராட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட நன்கொடை பணத்தில் ரூ. 80 லட்சத்தை அன்னா குழுவின் முக்கிய உறுப்பினரான அர்விந்த் கேஜ்ரிவால் தனது அறக்கட்டைளையில் டெபாசிட் செய்ததாக ஹிந்துத்துவ சாமியார்  அக்னிவேஷ் குற்றம் சாட்டியுள்ளார். என்பவறே குற்றம் சாட்டி இருக்கிறார். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் இருக்கிறது
இவர்களுக்கெல்லாம் ஒரே நோக்கம் பதவி வெறி, பணம், ஆளும் கொள்கை. இது பத்தாது என்று பி.ஜே.பி.யில் இருக்கும் பல மானங்கெட்ட தலைகள். காரணம் இவர்கள் பதவி இழந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இனிமேலும் பதவிக்கு வராவிட்டால் நம் கட்சியை மக்கள் மறந்துவிடுவார்கள் எனவே இந்த ஹசாரே அன் கோவை வைத்து காங்கிரசை ஆட்சியை விட்டு அகற்றவேண்டும் இதற்காக பணத்தை வாரி இறைக்கிரார்கள். இல்லையென்றால் ஹசாரே என்ன இந்திய சுல்தானா ? இல்லை பேடிதான் என்ன ராஜஸ்தான் இளவரசியா. ? லட்சக்கணக்கான மக்களுக்கை திரட்டி இவ்வளவு செலவு செய்ய ஏது பணம். கேட்டால் ஈசியாக சொல்கிறார்கள் மக்களிடம் வசூலித்தோம் என்று. இன்று இருக்கும் விலைவாசிக்கு இன்று பொழுதை கடன் இல்லாமல் கழித்தோமா என்று மக்கள் நினைக்கும் நிலை. இதில் இவர்களுக்கு கொடுக்க ஏது பணம் ?

ஹசறேயும் 

இந்த மக்கள் ஆட்சி வீழ்வதற்கு இவரின் கொள்ளை பங்காளிகள்தான் இந்தியாவின் அத்வானி, ஆர்.எஸ்.எஸ், மற்றும் ஹிந்துத்துவாக்கள் என இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இந்தப் பட்டியலில் பல்வேறு தொழில் அதிபர்கள், தொழில் போட்டிகள் மற்றும் இந்தியாவை வெளிநாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் முனைப்பின் விளைவுதான் இந்த நாடகம். 

அன்னா ஹஸாரேவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். இயக்கதான் என்ற திக்விஜய்சிங் மற்றும் பல நடுநிலையாளர்கள் கூரிய குற்றச்சாட்டை இவர் தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில் இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதுதான் என்ன? இப்படிபட்ட ஒரு பொய்யரை நம்பி நாம் ஏமாந்து கொண்டிருக்கிறோம்.அன்னா ஹஸாரே தனது வேஷத்தை கலைத்து வெளியே வருவாரா! தன்னை யாரென்று அறிவிப்பாரா!

நன்றி : சீர்காளியாரே

Tuesday, December 27, 2011

2 பேருடன் கள்ளத்தொடர்பு- ஈரான் பெண்ணின் தண்டனை மாற்றம்: கல்லால் அடிப்பதற்கு பதில் தூக்கில் போட முடிவு

ஈரான், டிச. 27-
கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட ஈரான் பெண்ணிற்கு கல்லால் அடிப்பதற்கு பதிலாக தூக்கில் போட்டு தண்டனை நிறைவேற்ற முடிவாகி உள்ளது.   ஈரான் நாட்டின் கிழக்கு அஜர்பைஜான் பகுதியைச் சேர்ந்தவர் அஷ்தியானி. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், 2 ஆண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
 
 இதை அறிந்து கண்டித்த அவரது கணவரை,கள்ளக் காதலர்களுடன் சேர்ந்து 2005-ம் ஆண்டு கொலை செய்தார். இவரும், கள்ளக் காதலர்களும் கைது செய்யப்பட்டனர். அஜர் பைஜான் சிறையில் அஷ்தியானி அடைக்கப்பட்டுள்ளார். அங்குள்ள சட்டப்படி கள்ளத் தொடர்பில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்துக் கொன்று தண்டனை நிறைவேற்றப்படும். மற்ற குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.
 
இதன்படி இவருக்கு 2006-ல் கல்லால் அடித்து கொல்லும் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், உலக நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. ஒரு வரை கல்லால் அடித்துக் கொல்வது காட்டுமிராண்டி தனம் என்று கண்டித்தன. இதையடுத்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 
 
எனினும் குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை அளித்தே ஆக வேண்டும் என்பதால், கல்லால் அடித்துக் கொல்லும் தண்டணைக்கு பதிலாக, தூக்கில் போட்டு தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப, ஏற்கனவே அளிக்கப்பட்ட உத்தரவிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. “கடும் குற்றத்தில் ஈடுபட்டவர், தண்டனையில் இருந்து எந்த வகையிலும் விலக்கு பெற முடியாது. எப்படியும் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
 
கள்ளத் தொடர்பில் ஈடுபட்ட அஷ்தி யானியின் மரண தண்டனை எந்த வகையிலாவது நிறை வேற்றப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அந்த வகையில், தூக்கில் போடுவதிலும் ஆட்சேபனை எழுப்ப போவதில்லை” என்று உள்ளூர் நீதிமன்ற அதிகாரி ஒருவர் கூறினார். 
 
THANKS : MAALAIMALAR

Friday, December 23, 2011

ஹசாராவை விளாசிய மும்பை உயர் நீதிமன்றம்!

மும்பை: லோக்பால் மசோதா குறித்து வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்யலாமே, மைதானம் எதற்கு என்று மும்பை உயர் நீதிமன்றம் அன்னா ஹசாரேவை கேட்டுள்ளது.

வலுவான லோக்பால் மசோதா வேண்டி அன்னா ஹசாரே வரும் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறார். அதற்காக மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தை தேர்வு செய்தனர். ஆனால் அந்த மைதானத்தின் ஒரு நாள் வாடகை ரூ.3.77 லட்சம் என்பதால் அன்னா குழு சற்று தயங்கியது. இதையடு்தது மைதானத்தை இலவசமாக அல்லது குறைந்த விலையில் தங்களுக்கு தருமாறு அன்னா குழு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இதற்கிடையே ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கலாமே என்று மகாராஷ்டிரா அரசு அன்னாவுக்கு அறிவுரை வழங்கியது. ஆனால் அந்த மைதானம் சிறியதாக உள்ளது என்று அன்னா குழு தெரிவித்தது. ஆசாத் மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடத்தையும் சேர்த்துக் கொடுத்தால் அங்கு போராட்டம் நடத்தத் தயார் என்று அந்தக் குழு கூறியது.

இந்நிலையில் அன்னா குழுவின் மனு நீதிபதிகள் மஜ்முதார், மிருதுலா பட்கர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது,

இது ஒரு ஜனநாயக நாடு. நாம் ஒரு அரசைத் தேர்வு செய்துள்ளோம். நாடாளுமன்றத்தில் லோக்பால் குறித்து விவாதம் நடைபெற்றுவரும் நிலையில் அதற்கு இணையானதொரு பிரசாரத்தை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. உங்கள் போராட்டம் நாடாளுமன்ற செயல்பாட்டில் குறுக்கிடுவதாக இல்லையா?. லோக்பால் மசோதா குறித்து மக்கள் தேர்வு செய்த பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்கள். சட்டம்-ஒழுங்கை காக்க நாங்கள் உறுதிமொழி எடு்ததுள்ளோம். எந்த சட்டத்தின் கீழ் நீங்கள் வாடகையைக் குறைக்கச் சொல்கிறீர்கள்?.

உங்களுக்கு வேண்டுமானால் அது சத்யாகிரகமாக இருக்கலாம். ஆனால் பிறருக்கு அது தொல்லை தானே?. சத்தியாக்கிரகத்தை விரும்பாத மக்களும் நாட்டில் இருக்கிறார்கள். பொதுக்கூட்டங்களால் மும்பையில் ஏற்கனவே கடும் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால் மும்பை மக்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கிடைத்தால் அங்கே போக வேண்டியது தானே? பிறகு ஏன் இங்கே தான் உண்ணாவிரதம் இருப்போம் என்கிறீர்கள். இடத்தில் என்ன இருக்கிறது?.

உங்களுக்காக எல்லாம் வாடகையைக் குறைக்கக்கோரி மகாராஷ்டிரா அரசு அதிகாரிகளைக் கேட்க முடியாது. அதற்குப் பதில் வீட்டில் இருந்தே பிரச்சாரம் செய்யலாமே, மைதானம் எதற்கு என்றனர்.

டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி:

இந் நிலையில் டிசம்பர் 27ம் தேதி முதல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த டெல்லி போலீசார் ஹசாரே குழுவுக்கு அனுமதி அளித்துள்ளனர்.

ஆனால், தற்போது அன்னா குழுவினர் உண்ணாவிரதப் போராட்டத்தை எங்கு நடத்துவது என்று தெரியாமல் குழம்பி வருகின்றனர்.

THANKS : THATSTAMIL

Saturday, October 15, 2011

கொலையில் முடியும் கள்ளக்காதல்கள்

கடந்த 2006ம் ஆண்டு ஜூலை மாதம், கேரளாவின் சுற்றுலாத்தலமான மூணாறு, குந்தலா அணைக்கட்டின் அருகே, கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம். யாரென அனைவரும் அதிர்ந்து நிற்க, அருகில், புதுப்பெண்ணான மனைவி வித்யாலட்சுமி. தேனிலவு வந்த இடத்தில், யாரோ அனந்தகிருஷ்ணனை கொன்றுவிட்டு, நகைகளை பறித்துச் சென்றதாக அவர் கூற, போலீஸ் விசாரணையும், மொபைல் போன் குறுந்தகவல்களும் உண்மையை வெளிக்கொண்டுவந்தன.

அடுத்தடுத்து அதிர்ச்சித் திருப்பங்கள்... திருமணமான ஏழே நாளில், அனந்தகிருஷ்ணன் கட்டிய மஞ்சள் கயிற்றின் ஈரம் கூட காயாத நிலையில், கள்ளக்காதலன் ஆனந்துடன் சேர்ந்து, வித்யாவே கணவனை கொன்றது அம்பலமானது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரை, அங்கொன்றும் இங்கொன்றுமாக அரங்கேறிக்கொண்டிருந்த இதுபோன்ற விஷயங்கள், தற்போது, தினசரி செய்தியாக மாறிவிட்டன. கணவனுக்கு தெரியாமல் மனைவி, மனைவிக்கு தெரியாமல் கணவன், மற்றொருவருடன் உறவு வைத்திருப்பது, சாதாரணமாகிவிட்டது.

334 கொலைகள் : மேற்கத்திய மோகமும், தகவல் தொழில்நுட்பக் கலாசாரமும் தமிழகத்தில் ஊடுருவத் துவங்கியபோதே, நாகரிகம் என்பதற்கான அடிப்படை விதிகளும் மாறிவிட்டன. இந்த வரிசையில், கள்ளக்காதலும் புதிய கலாசாரமாகிவிட்டது. ஆண், பெண் நட்பில், உடல் ரீதியான ஈர்ப்பு, பிரதான இடம் பிடித்துவிட்டது.

வீட்டில் கணவன், மனைவியின் தேவைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பூர்த்தியாகாதபோது புதிய துணையைத் தேடுகின்றனர். இந்த விவகாரம் பழைய துணைக்கு தெரியாதவரை பிரச்னை ஏற்படுவதில்லை. தெரிந்துவிட்டால், ஆண், பெண் யாராக இருந்தாலும், கண்டிப்பவரை, "காலி செய்யும்' அளவிற்கு துணிந்து விடுகின்றனர். கடந்தாண்டு மட்டும், 334 கொலைகள் நடந்துள்ளன.

கடந்த 2008, 2009, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் 143 ஆண்களும், 120 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில், அவர்களது மனைவிமார்கள் பெரும்பாலும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

காதலில் பல வகைகள் இருப்பதைப் போல், கள்ளக்காதலிலும் மூன்று, நான்கு பிரதான வகைகள் உள்ளன.

கவனத்தில் வராத மனைவியர் : முதல் வகைக்கு பலியாகுபவர்கள், பணமே பிரதானமாகக் கொண்ட ஆண்கள். இவர்களுக்கு, மனைவியிடம் காதலைக் காட்டுவதற்கு கூட நேரம் இருப்பதில்லை. இத்தகைய கணவன்மார்களின் மனைவிகளுக்கு, பக்கத்து வீட்டுக்காரனின், "ஹலோ! சவுக்கியமா?' என்ற குசல விசாரிப்பு கூட, மிகப் பெரிய குதூகலத்தைக் கொடுத்துவிடுகிறது. குசல விசாரிப்பு, "குஜால்' வரை சென்றுவிடுகிறது.
இத்தகைய பெண்களுக்கு, தன்னோடு பழகும் ஆணின் அழகோ, அறிவோ ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. கணவனை விட சுமாரான அழகு, அந்தஸ்து என இருந்தாலும், தன் மீது அக்கறை காட்டுகிறான் என்ற எண்ணமே, அவர்கள் பக்கம் இவர்களை விழ வைத்துவிடுகிறது. இது கணவன்மார்களுக்கு தெரியும் போது, முதலில் கண்டிப்பு, அடுத்த கட்டம், கொலை. இதில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றவர்கள் ஏராளம் என்கிறது போலீஸ் தரப்பு.

"மாஜி' காதல் : அடுத்த வகை, திருமணமான பின், கணவனது நடவடிக்கைகள் பிடிக்காமல், முன்னாள் காதலனுடன் கள்ளக்காதல் கொள்வது. பெற்றோர் விருப்பம், நிர்பந்தத்திற்காக காதலித்தவனை விட்டு வேறு ஒருவரை கரம் பிடிக்கும் பெண்கள், சில நேரங்களில் முன்னாள் காதலனை பார்க்கும் போது, மீண்டும் உள்ளிருக்கும் காதல் துளிர்க்கிறது. காதலனோ, பழைய காதலியின் பலவீனத்தை பயன்படுத்திக் கொள்ள, கள்ளத்தனமாக காதல் வளர்கிறது. இதில், பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பாக உணர்வதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது போன்ற சம்பவங்களிலும், சில நேரம், கட்டுப்படுத்துபவர் உயிர், "கட்டுப்பட்டுப்' போகிறது. இதற்கு, மூணாறு ஹனிமூன் கொலை ஒரு எடுத்துக்காட்டு. இது தவிர, சென்னையில், பள்ளி ஆசிரியை ஒருவர் முன்னாள் காதலனால், கொலை செய்யப்பட்ட சம்பவமும், கள்ளக்காதல் கொலை பட்டியலை உயர்த்தியது.

ஐ.டி., காதல் : ஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள், பெரும்பாலும், வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்றனர். கணவன், மனைவியை தவிர மற்ற உறவினர்களிடம் இருந்து பிரிந்திருக்கும் நிலையில், வேலை பளுவும் கூடும் போது, குடும்ப வாழ்க்கை பின்தங்குகிறது. இந்த நிறுவனங்களில் ஆண்கள், பெண்கள் சகஜமாக பழகுவதால், பல தொடர்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஐ.டி., நிறுவனங்களை தவிர, பல வீடுகளில் கணினி வசதி உள்ளதால், "சாட்டிங்' கலாசாரம் மூலமும் கள்ளக்காதல் விவகாரங்கள் பெருகியுள்ளன. பல நாட்கள் சாட்டிங் மூலம் பழகும் சிலர், நேரில் பார்க்கும் போது பிடித்துப் போனால், காதலை வளர்த்துக் கொள்கின்றனர். இதில், சிலர் "வீடியோ சாட்டிங்' மூலம், பாலியல் செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஜாலிக்காக கள்ளக்காதல் : இதைத் தவிர எதைப் பற்றியும் கவலைப்படாமல், விளையாட்டுக்காக அல்லது செக்ஸ் தேவைக்காக மட்டும் சிலருடன் உறவு வைத்திருப்பதை, "பேஷனாக' கருதுபவர்களும் உண்டு. திருமணமான ஆணும், பெண்ணும் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் இந்த வகையில் உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதில் இருவரும், தங்களது உண்மை துணைகளுக்கு ஒருபோதும் துரோகம் செய்வதில்லை; இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். கள்ளக்காதல் இன்று நேற்றல்ல; பல ஆண்டுகாலமாக இருக்கிறது. முன்பு கள்ளக்காதல் பாவம், துரோகம்; இன்று எல்லாம் சகஜம்.

"டிவி' தொடர்களும் ஒரு காரணம் : கள்ளக்காதல் சம்பவங்கள் தொடர்பாக, மனநல நிபுணர் நம்பி கூறியதாவது:
கிராமங்களில் அரசல் புரசலான விஷயங்கள், நகர்ப்புறத்தின் வளர்ச்சியால் தற்போது அதிகரித்துள்ளது. நகரமயமாதல், தொழில் மயமாதல் போன்ற காரணங்களால், தொடர்புக்கான வசதிகள் அதிகரித்துள்ளன. நகர்ப்புறத்தில், அடுத்த வீட்டில் யார் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு யார் வந்து செல்கின்றனர் என்பதே பலருக்கு தெரியாது. இதனால், ஆணோ, பெண்ணோ தவறு செய்வதற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
தாம்பத்ய வாழ்க்கையில் ஏமாற்றம் அதிகரிக்கும் போதும், கணவன், மனைவிக்கிடையில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும் போதும், பிறரது தொடர்புக்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடுகிறது. ஏமாற்றம், விரக்தியில், தேடுதல் உணர்வும் அதிகரிக்கிறது. இதை, ஊடகங்களும் அதிகளவில் ஊக்குவிக்கின்றன. "டிவி' சீரியல்கள் இது போன்ற விஷயங்களை நியாயப்படுத்துவதுடன், இப்படியெல்லாம் செய்யலாம் என்று தூண்டுகின்றன. கணவன்மார்களிடம் இருக்கும் குடிப்பழக்கம், பெண்களிடம் இருக்கும் அறியாமை ஆகியவை, இருதரப்பையும் அரவணைப்பை தேடச் செய்கிறது.

சிங்கப்பூரில், தற்கொலை சம்பவங்கள் அதிகரித்த போது, தற்கொலை செய்திகள் வெளியிடக் கூடாது என்று ஊடகங்களுக்கு மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைக்குப் பின், தற்கொலை சம்பவங்களே குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. டாக்டர்கள் சிலரும், இது போன்ற கள்ளத்தொடர்பு விஷயங்களை தவறானதில்லை என்று நியாயப்படுத்துகின்றனர். இதை சட்ட விரோதமான உறவு என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவ்வாறு நம்பி கூறினார்.

ஒழுக்கம் தான் ஒரே வழி? : இந்த சம்பவங்களில் நடவடிக்கை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: குடும்ப நல மையங்களில் முதலில், இது தவறு என்று கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது. மீறி தவறு செய்யும் போதும், புகார் வரும் போதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த விஷயத்தில், தனி மனித ஒழுக்கம் என்பது முக்கியம். அனைத்து மதங்களிலும், இந்த விஷயம் தவறு என்பது உணர்த்தப்படுகிறது. அதற்கான தண்டனையும் அளிக்கப்படுகிறது. ஆனாலும், யாரும் அவற்றை மதிப்பதில்லை.
இந்த விஷயங்களுக்கு ஊடகங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் பெரிதும் உதவுகின்றன. சமூகத்தில் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயப்படுபவர்கள் மட்டுமே, இந்த விஷயத்தில் சற்று தள்ளி நிற்கின்றனர். கலாசார சீரழிவுக்கு, இந்த விஷயம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்றாண்டுகளில் அதிகளவில் கள்ளக்காதல் கொலை நடந்த நகரங்கள்:

1. தர்மபுரி -38
2.கிருஷ்ணகிரி-27
3.நாகப்பட்டினம்-23
4.வேலூர்-20
5.தேனி-14. 

இந்த ஐந்து பகுதிகளும் பொருளாதாரம், கல்வியில் பின்தங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய சம்பவங்கள்:

* 2006 ஜூன்: தேனிலவுக்காக மூணாறு சென்ற போது, மனைவி வித்யாலட்சுமியின் ஏற்பாட்டின்படி, கணவன் அனந்தகிருஷ்ணன் கொல்லப்பட்டது.
* 2010 ஜூலை: தண்டையார்பேட்டையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியை, முன்னாள் காதலனால் கொல்லப்பட்டது.
* 2010 ஜூலை: தன் வயிற்றில் வளர்ந்த கருவை கலைக்கச் செய்ததற்காக, கள்ளக்காதலன் ஜெயக்குமாரின் மகன் ஆதித்யாவை, காதலி பூவரசி கொன்று, சூட்கேசில் வீசியது.
*2011- சார்லஸ் என்பவர், நண்பனின் மனைவியுடன் கொண்டிருந்த கள்ளத் தொடர்பு காரணமாக கொலையுண்டது.
* 2011 பிப்ரவரி- சிந்தாதிரிப்பேட்டையில் சிரஞ்சீவி என்பவர் மனைவி, கணவனின் கள்ளத்தொடர்பை கண்டிப்பதற்காக தீக்குளித்தது.
* 2011 செப்டம்பர்- சூளைமேட்டைச் சேர்ந்த ஒரு இளம்பெண், கணவன் மற்றும் குழந்தைகளை விட்டு, காதலனுடன் சென்று, மூன்று மாதம் கழித்து திரும்பி வந்தது.

THANKS : DINAMALAR

Friday, September 16, 2011

வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக பாசிச வெரி பிடித்த பிஜேபி யுடன் கூட்டணி?

வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து,  அகமதாபாத்தில் 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போகும் குஜராத் முதல்வர்  மாமிசம் தின்னும் மிருகம் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
 
இதில் வருத்தப்படவோ வேதனை படவோ அவசியம் இல்லை இது எல்லோராலும் எதிர்பாக்க பட்ட ஒன்றுதான், பதினைந்து வருடத்திற்கு முன்பு ஒன்றினைந்த தா மு மு க மாநாட்டில் பிஜேபி யுடன் கூட்டணி வைத்தது தவறு என்று கூறி அடுத்த தேர்தலில் அவர்களுடன் கூட்டணி வைத்ததை யாரும் மறந்து விட முடியாது.
 
அதிமுக சார்பில் இந்த உண்ணாவிரதத்தில் மைத்ரேயன், தம்பிதுரை ஆகிய எம்பிக்கள் பங்கேற்கவுள்ளனர்.

அமைதி, மத நல்லிணக்கத்திற்காக 3 நாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நரேந்திர மோடி அறிவித்துள்ளார். குஜராத் மதக் கலவர வழக்கில் நரேந்திர மோடியை விசாரிப்பது குறித்து கீழ் நீதிமன்றம்தான் முடிவு செய்ய முடியும். இதில் நாங்கள் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து இந்த உண்ணாவிரதத்தை அறிவித்தார் மோடி.

நாளை முதல் இந்த உண்ணாவிரதம் தொடங்கவுள்ளது. இந் நிலையில் இந்த உண்ணாவிரதத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் நரேந்திர மோடியை அகமதாபாத்தில் சந்தித்து ஜெயலலிதாவின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Sunday, September 11, 2011

தன்மான சிங்கம் சீமான்?

Sunday, September 11,2011 10:12 PM, jjpandian said:
சீமான் உனக்கு சுயநினைவு இருக்கா? தண்ணி போட்டுட்டு உளறலையே? பிரபாகரனை பிடிச்சி வந்து தூக்கில போட சொன்னது நீ இப்போ சொல்லுற அம்மா தான், நீ மறந்திருக்கலாம் காலம் மறக்காது, நீயும் உன் கூட்டமும் சோத்துக்கு அலையுரிங்களா இல்ல இன்னும் ஏமாத்த விஜயலட்சுமி கிடைபாங்கனு அலையுரின்களா, சுரணை கேட்டவன்களே.
Sunday, September 11,2011 10:04 PM, தமிழ்மறவன் said:
ஜால்ரா சீமான், நீ முந்தானையை பிடித்துக்கொண்டு அலைவதற்குத்தான் லாயக்கு. ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பின்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்த கட்சி தலைவி எங்கே போனார்? ஏன் அந்த மேடைக்கு போகவில்லை? மர்மம் நீடிக்கிறது!!! உன்னையும் சேர்த்து தூக்கில் போடவேண்டும்.
Sunday, September 11,2011 09:41 PM, தமிழன் said:
டுபாகூர் சீமான் அவர்களே ! வரலாறு எங்களுக்கும் தெரியும் , ராஜீவ் இறக்கும் போது காங்கிரஸ் காரர்கள் எங்கே போனார்கள் என்று தெரியாது , ஆனால் பிரபாகரன் மற்றும் பல லட்சம் இலங்கை தமிழர்கள் இறந்த போது நே எங்கே சென்றாய் , தினமும் நியூஸ் பார்த்து கொண்டிருந்தாய விஜி வீட்டில் ? போராட்டம் என்றால் எல்லோரும் சாகும் வரை மைக்கில் பெசிகொண்டுருபத? நீ தீ குளித்து பார் முன்று பேர் அல்ல இலங்கை தமிழர் அனைவரும் காப்பற்றபடுவர்கள் ,

Sunday, September 11,2011 05:21 PM, அமுதன் said:
சீமான் ...... நீ பேசுவதை கேட்டல் சிரிப்பு வருது !!!!! தூக்கு நிச்சயம் அவர்களுக்கு , நீ சாக மாட்ட , சும்மா பூச்சாண்டி காமிகுற !!!! உண்ணாவிரதம் எடு சாகும் வரை ... பார்போம் !!!!
Sunday, September 11,2011 05:03 PM, மணிமாறன் said:
அடுத்ததாக நாவரசுவை கொலை செய்த ஜான் டேவிடின் தண்டனையை கூட நாம் எதிர்க்க வேண்டும். ஏனென்றால் ஜான் டேவிட் கூட தமிழன் தான்
On Sunday, September 11,2011 09:23 PM, thamilan said :
சரியாக சொன்னீர்கள் ! அப்படியே தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் உள்ளவர்களையும் காப்ற்ற சொல்லுங்கள் , ஏன்யென்றால் அவர்களும் தமிழர்கள்தான்