Sunday, September 16, 2012

உலக முஸ்லிம்களை மிரட்டும் அமெரிக்க வெறி நாய் ஒபாமா ....



எப்போதெல்லாம் அமெரிக்காவில் தேர்தல் வருகிறதோ அப்போதெல்லாம் இஸ்லாமியர்கள் மீது  ஏதோ ஒரு பழியை போட்டு  அதன்மூலம்  வெற்றி பெறுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கும் அமேரிக்க  வெறி நாய்கள் இப்பொழுது உலக இஸ்லாமியர்களை  சீண்டும் வகையில் ஒரு அல்சேசன் நாயை வைத்து  நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி திரைபடத்தை வெளி இட்டுள்ளார்கள். இதை எதிர்த்து கேட்டால் உலக  முஸ்லிம்களை  மிரட்டும் விதமாக பேசி இருக்கும் அமெரிக்க  வெறி  நாய் ஒபமாவின் அறிக்கை. 
 
அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட திரைப்படத்தில், இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாக கூறி, இஸ்லாமியர்கள் உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்க தூதரகங்களை குறிவைத்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களில் தூதரகங்கள் தாக்கப்படுவதுடன், அதிகாரிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, தங்கள் நாட்டு பிரஜைகளை தாக்கினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:-

அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது. தாக்குதல் நடத்துபவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அதற்காக அவர்களின் வழியை நாங்கள் பின்பற்ற மாட்டோம். அதேசமயம் அமெரிக்காவை சீண்ட யாரையும் அனுமதிக்க மாட்டோம். அமெரிக்காவில் மத சுதந்திரம் உள்ளது. இஸ்லாம் உள்ளிட்ட எந்த மதத்தின் பெருமையையும் குலைக்கும் செயல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை.

வன்முறைகளால் எந்த நியாயமும் கிடைக்காது. அப்பாவி ஆண்களையும், பெண்களையும் குறிவைத்து தாக்குவதை மன்னிப்பது மதம் கிடையாது. எனவே எங்கள் தூதரகங்களையும், துணை தூதரகங்களையும் தாக்குவதை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்கர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். இதுபற்றி உலகம் முழுவதிலும் உள்ள அரசுகளை தொடர்புகொண்டு, எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு உதவி செய்ய வேண்டியது அவர்களின் பொறுப்பு என்று கூறி வருகிறோம். இத்தாக்குதல்களால் ஏற்பட்ட இழப்பிற்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம். 

Friday, March 2, 2012

கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கக்கோரி சென்னையில் மாநாடு: அப்துல்கலாம் கலந்துகொள்கிறார்

சென்னை, மார்ச்.3-
 
அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சந்திரன் ஜெயபால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
இந்தியாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி ஏழை நாடாக ஆக்குவதே கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டகாரர்களின் திட்டம் ஆகும். இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். கூடங்குளம் மக்களிடம் பேசவேண்டும் என்று போராட்டக்காரர்களின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அங்கு செல்லக்கூடாது.
 
கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்கவேண்டும் என்று போராடுவதால் எனக்கு அமெரிக்காவில் இருந்து போன் மூலம் மிரட்டல் வந்தது. போலீசார் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
 
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டுதான் போராடுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவர்கள் மீது மத்திய-மாநில அரசுகள் விசாரணை நடத்தவேண்டும்.
 
கூடங்குளம் அணுமின்உற்பத்தியை துவங்குவதற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் நீக்கி மின்வெட்டு இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணிவரை கருத்தரங்கம்-மாநாடு நடத்த உள்ளோம்.
 
இந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மற்றும் அனைத்து சமுதாய தலைவர்கள், அனைத்து ஆதரவு கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் தொழில் முதலீட்டாளர்கள் சங்க தலைவர்கள், வியாபார சங்க தலைவர்கள், விஞ்ஞானிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
 
இவ்வாறு ஆர்.சந்திரன் ஜெயபால் கூறினார்.
 
பேட்டியின் போது அணுமின் உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கமிட்டி அமைப்பாளர்கள் மு.கிருஷ்ணபறையனார், ஆர்.காந்தையா, பி.இளங்கோ, மயிலை சுகுமாரன், பொதுச்செயலாளர் சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Thursday, February 23, 2012

ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது: மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி, பிப்.23-

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஓரினச்சேர்ககைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது:

ஓரினச்சேர்க்கை முற்றிலும் ஒழுக்ககேடான செயல். மேலும், இது இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், சமூக ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறைக்கு எதிரானதாகும். இது இயற்கைக்கு முரணானதாகும்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவில் கலாச்சாரம் உலகளவில் பேசப்படும் உயர்வான இடத்தில் உள்ளது. எனவே, ஓரினச்சேர்க்கையை இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Tuesday, February 7, 2012

உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, பிரசாரத்தில் ஈடுபட்ட உதயகுமார் ஆதரவாளர்களை, காயல்பட்டினம் பொதுமக்கள், ஓட ஓட விரட்டி விட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, உதயகுமார் தலைமையிலான குழுவினர், தொடர் போராட்டம், பிரசாரம் நடத்தி வருகின்றனர்.அணு எதிர்ப்பு போராட்டத்திற்கு, தமிழக மக்களில் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், அணு எதிர்ப்பாளர்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. இதனால், அணு எதிர்ப்பாளர்கள் பல்வேறு பொது இடங்களுக்கு சென்று, எந்த அனுமதியுமின்றி பொய் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.திருநெல்வேலி கலெக்டர் அலுவலக வளாகத்தில், அணு எதிர்ப்பாளர்கள் கூட்டமாக வந்தபோது, அங்கு வந்த அணு உலை ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபட்டு, போலீசார் மீது செருப்புகளை வீசினர். உதயகுமாருக்கு ஆங்காங்கே எதிர்ப்பு வலுப்பதால், அவர் மொட்டை போட்டு, பொது இடங்களுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் செல்கிறார்.

இந்நிலையில், உதயகுமாருக்கு ஆதரவானவர்கள், நேற்று மாலை, தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பஸ் நிலையம் முன் திரண்டு, அணு உலையை மூடக்கோரி கோஷமிட்டனர். பொதுமக்களிடம் அணு உலைக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டு, துண்டுப் பிரசுரங்களை கொடுத்தனர்.இதுகுறித்து, தகவலறிந்த ஊர் மக்கள், பஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து, அணு உலை எதிர்ப்பாளர்களை ஓட ஓட விரட்டினர். மின் வெட்டால் தத்தளிக்கும் நிலையில், அணு உலையை மூட பிரசாரம் செய்கிறாயா என, அணு எதிர்ப்பாளர்கள் மீது, வசை மாறி பொழிந்தனர்.

இதுகுறித்து, அணு உலை எதிர்ப்பாளர்கள், ஆறுமுகனேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆனால், பொதுமக்களே திரண்டு வந்து அணு உலை எதிர்ப்பாளர்களை விரட்டியதால், போலீசாரும் செய்வதறியாமல் திகைத்து, அணு எதிர்ப்பாளர்களை ஊருக்கு வெளியே அனுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

உதயகுமாரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் 13ம் தேதி ஆர்ப்பாட்டம்"மொட்டை போட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தரும் உதயகுமாரை கைது செய்ய வேண்டும், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், உற்பத்தியை உடனே துவக்கி, அதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் சார்பில், வரும் 13ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

இது குறித்து, தமிழ்நாடு டிப்ரஸ்டு கிளாசஸ் லீக் தலைவர் அருள்தாஸ் கூறியதாவது:சென்னையைத் தவிர, தமிழகம் முழுவதும், ஏறக்குறைய எட்டு மணி நேர மின் தடை அமலில் உள்ளது. பனிக்காலத்தில் இந்த நிலை என்றால், வரும் கோடை காலத்தில், மக்கள் அனைத்து விதமான இன்னல்களையும் அனுபவிக்க உள்ளனர்.இந்த அவல நிலை மாறுவதற்கு, வரப்பிரசாதமாக கிடைத்த, கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்க விடாமல், தேச விரோத கும்பல், உதயகுமார் தலைமையில் தடுத்துக் கொண்டிருக்கிறது. "மத்திய அரசு, எங்கள் மக்களை மொட்டை அடிக்கிறது. அதனால், நாங்கள் மொட்டை அடித்துக் கொள்கிறோம்' என, மொட்டை போட்டு, உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமானத்தை தேடித்தரும் உதயகுமாருக்கு, நாட்டின் குடிமகனாக இருக்கும் தகுதியே கிடையாது.

எனவே, இவரை நாடு கடத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதா ஒருவரால் தான், கூடங்குளம் அணு மின் நிலையத்தைச் செயல்பட வைக்க முடியும். எனவே, தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், உதயகுமார் மற்றும் அவரது தலைமையிலான தேச விரோத கும்பலை கைது செய்ய வேண்டும். கூடங்குளம் அணு மின் நிலையத்தில், உற்பத்தியை உடனே துவக்கி, அதில், 1,500 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு தர, மத்திய அரசை வலியுறுத்தி, வரும் 13ம் தேதி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அருள்தாஸ் தெரிவித்தார்.

Thursday, January 19, 2012

அட கேடு கெட்ட உயர் நீதி மன்றமே!...

தாரமங்கலம் அருகே, ஐகோர்ட் அனுமதி பெற்று நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சியில், கவர்ச்சி உடையோடு அழகிகள் குத்தாட்டம் போட்டது, "ஜொள்' ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன், கோவில் பண்டிகையின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாளடைவில் நிகழ்ச்சியில் நடனமாடும் அழகிகள் அரைகுறை ஆடையுடன், ஆபாசமாக ஆடியதால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், சேலம் மாவட்டத்தில் பண்டிகையின் போது, கலைக்குழுவினர் நடத்தும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. அதனால், சேலம் மாவட்டத்தில் சில ஆண்டுகள் கோவில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.  
இந்நிலையில், பண்டிகை நடத்தும் குழுவினர் ஆடல், பாடல் நிகழ்ச்சி என்பது பாரம்பரியமாக நடத்தப்படுவது. அதற்கு தடை விதிக்கக் கூடாது எனக் கூறி ஐகோர்ட்டில் உத்தரவு பெற்று, ஆங்காங்கே கோவில் பண்டிகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த துவங்கினர்.

 சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த ராமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, ஐகோர்ட் அனுமதி பெற்று நேற்று முன்தினம் இரவு, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அழகிகள் அரைகுறை உடையுடன், ஆபாச செய்கைகளுடன் குத்தாட்டம் போட்டனர்.

அழகிகளின் கவர்ச்சி நடனம், நிகழ்ச்சியை காண வந்த பல ஆயிரம், "ஜொள்' ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மற்றொருபுற நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் தர்மசங்கடப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவு என்பதால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும் நடவடிக்கை எடுக்க முடியாமல், நிகழ்ச்சியை கடைசி வரை கண்டு ரசித்தனர். 

Thursday, January 12, 2012

உதயக்குமார் வீட்டு முன் ஜன.30 ல் ஒப்பாரி போராட்டம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் வீட்டுமுன் ஒப்பாரி போராட்டம் நடத்த உள்ளதாக, அணுஉலை ஆதரவு இயக்க தலைவர் சத்தியசீலன் தெரிவித்தார்.

கூடங்குளம் அணுமின்நிலைய ஆதரவு இயக்க தலைவர்களில் ஒருவரான சத்தியசீலன் நேற்று நெல்லை கலெக்டர் செல்வராஜை சந்தித்து மனு கொடுத்தார். அதில் கூடங்குளத்தை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவர், அணுமின்நிலையத்திற்கு எதிராக போராடும் கும்பல்களுடன் சேர்ந்து, அணுமின்நிலையம் முன் அமர்ந்து விஞ்ஞானிகள், இன்ஜினியர்களை மிரட்டிவருகிறார். அரசு அனுமதியளித்துள்ளபடி, மிகவும் சொற்பமான இன்ஜினியர்கள் மட்டும் அங்கு சென்றுவருகின்றனர். எனவே, அவர்களது உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கும்பலுடன் இணைந்து பணியாற்றும் கிராம நிர்வாக அதிகாரியை வெளியேற்ற வேண்டும். அணுமின் நிலையம் விரைவில் மின்உற்பத்தியை துவக்கவேண்டும். அதற்கான தேதியை உடனடியாக பிரதமர் அறிவிக்கவேண்டும்.

வரும் 30 ம் தேதி கூடங்குளத்திற்கு எதிராக போராடும் அமைப்பினர் அணுஉலையின் மாதிரி படத்தை வைத்து வைத்து போராட உள்ளதாக கூறுகின்றனர். அதே நாளில், அணுஉலை உற்பத்தியை துவக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் சர்வசமய பிரார்த்தனை மேற்கொள்வோம். தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயக்குமார் வீட்டுமுன் ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார். அவருடன் அணுஉலைக்கு ஆதரவான இயக்கத்தை சேர்ந்த தி.மு.க.,பிரமுகர் செட்டிகுளம் விஜயன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

எந்த கட்சியை எதிர்த்தும் தேர்தல் பிரசாரம் இல்லை என்று அன்னா ஹசாரே குழு அறிவிப்பு

ஊழல் மற்றும் லஞ்சத்தை ஒழிக்க வலுவான லோக்பால் மசோதா கொண்டு வரப்பட வேண்டும் என்று போராடி வரும் காந்தியவாதி அன்னா ஹசாரே குழுவினர், நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தேர்தல் பிரசாரம் செய்ய போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், திடீரென்று அவர்கள் தங்கள் முடிவை மாற்றி கொண்டுள்ளனர். எந்த கட்சியை எதிர்த்தும் தேர்தல் பிரசாரம் இல்லை என்று அன்னா ஹசாரே குழு அறிவித்துள்ளது.

Friday, January 6, 2012

முத்திரைத்தாள் மோசடி சாந்தி பூஷனுக்கு ரூ. 27 லட்சம் அபராதம்

புதுடெல்லி, ஜன.6-
 
ரூ. 1.35 கோடி மதிப்பிலான வீட்டுமனை ஒன்றிற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை  விட குறைவாக முத்திரைத்தாள் கட்டணம் செலுத்திய சாந்தி பூஷனுக்கு ரூ. 27 லட்சம் அபராதம் விதித்து அலகாபாத் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
அபராதத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், தான் முத்திரைத்தாள் கட்டணம் குறித்து எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என்று சாந்தி பூஷன் கூறி வருகிறார்