Thursday, July 25, 2013

இரண்டு வேடம் போடும் கருனா(க)நிதி இஸ்லாமியர்களே ஏமாறாதீர்....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில், சென்னையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பின்னர் கருணாநிதி பேசியதாவது: முஸ்லிம் சமுதாயம் பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றன. நான் சிறுவயதில் பார்த்த முஸ்லிம் லீக் இப்போது இல்லை.

சிறுபான்மை மக்களின் நலனுக்காக, தி.மு.க., ஆட்சி நடந்தது. இவ்வாறு, அவர் பேசினார்.

மோடிக்கு எதிரான கடிதத்தில் கையெழுத்து போட்டால்.. திமுக எம்.பி.களுக்கு கருணாநிதி எச்சரிக்கை!

 இதுபற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்கா செல்ல "விசா" அளிக்கக் கூடாது என்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கையெழுத்திட்டு அமெரிக்கக் குடியரசு தலைவருக்குக் கடிதம் எழுதியதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அந்தக் கையெழுத்தினை தாங்கள் போடவில்லை என்றும், இந்தப் பிரச்சினையைக் குறிப்பிட்டு தங்களிடம் யாரும் கையெழுத்து பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்தப் பிரச்சினையிலே அமெரிக்கக் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று கூறிய போதிலும், அவ்வாறு கையெழுத்திடுவதை தலைமைக் கழகம் ஏற்கவில்லை. அவ்வாறு கையெழுத்திட்டு அனுப்புவது கழகத்திற்கு ஏற்புடையதல்ல! தலைமைக் கழகத்தைக் கலந்து பேசாமல் எவறேனும் அவ்வாறு கையெழுத்திட்டிருந்தால் அவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளார்.

THANKS : THATSTAMIL

No comments:

Post a Comment